சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!

Share this News:

ஜித்தா (20 டிச 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்  தன்னார்வலர்கள், இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.

19 டிசம்பர் 2020 சனிக்கிழமை மாலை 09 மணிக்கு ஜித்தாவில் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட விழாவில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின் நடந்த நிகழ்ச்சியில், கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் கேடயங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இ.எம். அப்துல்லாஹ், ஆலி கோயா, ஃபயாசுத்தீன்,ஃபெரோஸ் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கோவிட் காலத்தில் செய்த சேவைகளை அல் அமான் அஹமத் வீடியோ காட்சி மூலம் விளக்கினார்.  இதில்   இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Share this News:

Leave a Reply