இன்று உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!

Share this News:

சென்னை (31 மார்ச் 2022): சென்னையில் இன்று (மார்ச் 31) பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 107 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து விலை உயரத்தொடங்கியது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விலையேற்றம் காணாமல் இருந்த பெட்ரோல் விலை தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி உள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து 107.45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து 97.52 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது.


Share this News:

Leave a Reply