ரஜினிக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை – கட்சி தொடங்குவதில் சிக்கல்!

Share this News:

ஐதராபாத் (27 டிச 2020): மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் ஆன ரஜினி பாதுகாப்புடனும் அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் ஓய்வுடன் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்று மாலையே தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ரஜினி புதுகட்சி துவங்கும் தேதி குறித்த அறிவிப்பை வரும் 31ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும், எந்த வேலையும் செய்யவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதால் புதிய முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.


Share this News:

Leave a Reply