காங்கிரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சியில் உள்ள ஸ்டாலின்!

Share this News:

சென்னை (15 மார்ச் 2021): தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெரிய கட்சியாக கணிக்கப்படும் காங்கிரஸ் தற்போது வலுவிழந்து இருப்பதால் சீட் கொடுப்பதில் ஸ்டாலின் ஆரம்பம் முதலே கறாராக இருந்தார்.

எனினும் அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. ஒருவழியாக 25 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால் ஏன்தான் 25 தொகுதிகள் கொடுத்தோமோ, தப்பு செய்துவிட்டோமே என்று ஸ்டாலின் வருத்தப்படும் நிலை ,ஏற்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட 25 சீட்களில் எல்லாம் காங்கிரஸ் ஜெயிக்குமா? என்பது ஸ்டாலினின் கவலையாக உள்ளது.


Share this News:

Leave a Reply