உதயநிதியின் ஆயுதத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!

Share this News:

சென்னை (05 ஜூன் 2021): எய்ம்ஸ் மருத்துவ மனையின் ஒற்றை செங்கல்லை வைத்து கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி, பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply