மோசமான நிலையில் தமிழ் சினிமா – விஜய் பட இயக்குனர் ஆதங்கம்!

சென்னை (21 ஏப் 2022): அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா மோசமாக உள்ளதாக விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விழா ஒன்றில் பேசுகையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹிட் படம் பண்ண தான் ஆவலுடன் இருப்பதாக இயக்குநர் பேரரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். விஜய்க்காக 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், இன்றைய சூழலுக்கேற்ப அந்த படத்தின் கதைகள் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இப்போதெல்லாம் ஷார்ட் பிலிம் பண்ணிட்டும், ஒரு படம், ரெண்டு படம் பண்ணிட்டும் பெரிய நடிகர்கள் படங்களை இயக்குநர்கள் இயக்குவதால் தான் தமிழ் சினிமா இப்படியொரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா நாசமடைந்து வருவதாகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பேரரசு இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...