மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது.

லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு ‘தர்ம சுதந்திர சுதந்திர மசோதா’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, மதம் மாறியவர்கள் திருமணத்திற்கு முன்பு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே கலெக்டருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். மீறுபவர்கள் கைது செய்யயப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. . இதற்காக உதவும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று இத மசோதா கூறுகிறது.

கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சட்டம் அமல்படுத்தியதை அடுத்து மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதே போன்ற சட்டங்களை கொண்டு வரவுள்ளதாக பாஜக தலைமையிலான கர்நாடகா, ஹரியானா அரசுகளும் அறிவித்துள்ளன.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...