மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வெளிநாட்டவர்கள் கைது!

கவுஹாத்தி (28 அக் 2022): கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்டிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகன்சன் ஆகியோர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாடு கடத்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளுடன் ஸ்வீடன் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை விடுவித்த போலீசார் பின்பு அவர்களை நாடுகடத்தினர்.

சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், மத பிரசாரம் செய்ததாக வழக்குபதிவு செய்த போலீசார், நஹர்கட்டிய நகரின் தேயிலைத் தோட்டப் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தோட்டத் தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு அவர்களைக் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மத போதனை நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை. அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 (விசா நிபந்தனைகளை மீறுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...