விவசாயிகள் போராட்டம் – அண்ணா ஹசாரே அதிரடி அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (29 டிச 2020): சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஹசாரே தலைமையிலான போராட்டம் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் தொடங்கும். என்று அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு டிசம்பர் 15 அன்று அண்ணா ஹசாரே கடிதம் எழுதினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றினால் மட்டுமே விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று கடிதத்தில் ஹசாரே சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply