பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் நன்னடத்தை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Share this News:

புதுடெல்லி (18 அக் 2022): பிகிஸ் பானு வழக்கில் எந்த நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவரது 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களை குஜராத் மாநில அரசு கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை செய்தது.

இந்த விடுதலை நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, மேற்கு வாங்க எம்பி மகுவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதில், விடுவிக்கப்பட்ட 11 பேரும் பதில் அளிக்கவும், கருணை அடிப்படையில் விடுவித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கும் கடந்த மாதம் 9-ந்தேதி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, குஜராத் அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நிதிமாட்னரத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய, மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது நடத்தப்படும் விசாரணையை வருகிற நவம்பர் 29-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி
வைத்து உள்ளது.


Share this News:

Leave a Reply