குடியுரிமை சட்டத்திற்கு பாஜக முதல்வர் எதிர்ப்பு – நெருக்கடியில் பாஜக தலைமை!

புதுடெல்லி (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சட்டத்திற்கு, பா.ஜ.க., ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த, அசாம் மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், மு‌தல் ஆளாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அசாமில் பிறந்தவன் என்பதால், மாநிலத்தில் வெளிநாட்டினரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது, மத்திய பா.ஜ.க., அரசுக்கு தர்மச் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...