தலித் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரத்தின் உச்சம்!

அஹமதாபாத் (13 ஜன 2020): குஜராத்தில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார்.

குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், வண்புணர்வு செய்யப்பட்டதோடு, அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை எதிர்த்து மோடசா காவல் நிலையம் முன் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினார்கள். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டி அவர்கள் போராட்டம் நடத்தியபோதும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் நடந்தது என்ன என்று தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...