முன்னாள் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடம்!

Share this News:

கவுஹாத்தி (01 செப் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அசாம் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய்(85) உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிக்கப்பட்ட தருண் கோகாய் கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் தருண் கோகாய்-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இந்த தகவலை அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply