கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!

Share this News:

சண்டிகர் (27 அக் 2020): கல்லூரி வாசலில் வைத்து மாணவி சுட்டுக் கொலை செய்யப் பட்ட சமப்வம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் நேற்று மதியம் கல்லூரிக்கு மாணவி ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பெண்களை வழிமறித்து அவர்களில் ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்கின்றனர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி சுட்டுவிட்டு, பின்னர் காரில் ஏறி தப்பிச் செல்கிறார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாகியால் சுடப்பட்ட அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா(வயது 21) என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply