எம்.எல்.ஏக்கள் தொழிலதிபர்களுடன் உல்லாசம் – சிக்கிய இளம்பெண்!

Share this News:

கமல்ஹாண்டி (15 அக் 2022): ஒடிசாவில் எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள் என உல்லாசம் அனுபவித்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்த இளம் பெண் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அர்ச்சனா நாக். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா நாக், 2015ஆம் ஆண்டில் புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்து தனியார் நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த அர்ச்சனா, ஜெகபந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜெகபந்து பழைய கார்களை விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக இருவரும் திட்டம் திட்டியுள்ளனர்.

ஏற்கனவே விபச்சார தொழில் நடத்தி வந்த அர்ச்சனா, பல பெண்களை வைத்து , ஜெகபந்துவுக்கு பழக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை விபச்சாரம் செய்யும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செய்து, அவர்கள் அந்தரங்க செயல்களை அர்ச்சனா புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர் அந்த நபர்களிடம் தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர் அர்ச்சனா மற்றும் ஜெகபந்து தம்பதி. இவ்வாறு 18 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பறித்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளார் அர்ச்சனா.

சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு அர்ச்சனா மிரட்டியுள்ள நிலையில், அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அப்போது தான் இந்த பகீர் மோசடிகள் அம்பலமானது. புவனேஸ்வரில் உள்ள அர்ச்சனா மற்றும் அவரது கணவர் ஜெகபந்துவை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.இவ்விவகாரம் ஓடிஸா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply