ஒன்றிய அரசின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்!

புதுடெல்லி (01 ஜன 2022): நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள இலவச உணவு தானிய விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சுமார் 81.35 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளனர்.

இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று ரேஷன் கடைகளுக்கு கட்டாயமாகச் சென்று தினசரி அறிக்கைகளை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்குவது தொடர்பாக மாநிலங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

முன்னதாக, மானிய விலையில் ஒரு கிலோ அரிசி, 3 ரூபாய், கோதுமை கிலோ ஒன்றுக்கு, 2 ரூபாய், தானியங்கள் 1 ரூபாய் என பயனாளிகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இவை தற்போது இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...