போராட்டக் களத்தில் கொண்டாடப் பட்ட குடியரசு தினம் – மக்கள் வெள்ளம் (வீடியோ)

புதுடெல்லி (27 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் 40 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் போராட்டக் களத்தில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் காலை பல லட்சக் கணக்கானோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேசியக் கொடிக்கு உரிய மரியாதையுடன் பல லட்சம் மக்கள் நின்று மரியாதை செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

அரசு ஷஹீன் பாக் போராட்டத்தை ஒடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டபோதும் பொது மக்கள் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று உறுதியுடன் நின்று போராடி வருகின்றனர்.

போராட்டக் களத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி…!

டெல்லி ஷஹீன் பாக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் குடியரசு தின கொடியேற்றம்

Posted by Inneram on Sunday, January 26, 2020

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...