அதானி குழுமம் மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (04 பிப் 2023): அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகம் இதுகுறித்து விசாரனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானியின் நிதித் தகவல்கள் மற்றும் பதிவுகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு இதுவே முதல் விசாரணை.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானாலும், அதானி குழுமத்தை ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானிக்கு ஒன்றிய அரசு உதவி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பின. இந்நிலையில் விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதானி குழுமத்திற்கு எதிராக செபியும் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. விசாரணை அறிவிக்கப்படும் நிலையில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...