வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் குழும தலைவர் கைது!

மும்பை (26 டிச 2022): ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து தூத்தை சிபிஐ கைது செய்தது.

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோகான் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.ஐ.சி.ஐ 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சந்தா கோச்சார் வங்கித் தலைவராக இருந்தபோது வீடியோகான் குழுமத்துக்கு வழங்கப்பட்ட 3250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.

மேலும் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுவல்லாமல் பல்வேறு நிறுவனங்களும் இந்த வழக்கில் சிக்கியுள்ளன. இதே வழக்கில் கடந்த மாதம் வேணுகோபால் துதாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...