கட்டிப்பிடித்த இளம்பெண் – முதியவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார்.

முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயினை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. பின்னர், மலாட் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். சீனியர் இன்ஸ்பெக்டர் ரவி அதானே தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில்,திருட்டில் ஈடுபட்ட கீதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கீதா இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிதா பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....