ஒமான் சுல்தான் 121 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை!

மஸ்கட் (13 ஜன 2023): ஓமானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 121 கைதிகளை சுல்தான் ஹைதம் பின் தாரிக் விடுதலை செய்தார்.

அவர் பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 57 பேர் வெளிநாட்டினர். கடந்த ஆண்டு 229 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஜனவரி 11, 2020 அன்று, சுல்தான் கபூஸின் வாரிசாக சுல்தான் ஹைதம் பின் தாரிக் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், ஓமன் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்கள், உள்நாட்டவர், வெளிநாட்டினரைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படுகின்றன.

மேலும் எண்ணெய் அல்லாத துறைகளில் இருந்து வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...