சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை.

மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பதினெட்டு பேர் உள் நாட்டினர் மற்றும் எட்டு பேர் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு மீறல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...