சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேர் கைது!

ரியாத் (09 டிச 2020): சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்.

சவூதியின் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விறகு உள்ளிட்டவை விற்பனை செய்வது குற்றமாகும். இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து விறகுகளுக்கான விற்பனை தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக விறகு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்ற 188 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், கிழக்கு மாகாணம், அல்-ஜாவ்ஃப், வடக்கு மண்டலம் மற்றும் தபுக் ஆகிய இடங்களில் பலர் மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய சட்டத்தின் கீழ், மரக் கடத்தலுக்கான குறைந்தபட்ச அபராதம் 10,000 ரியால் ஆகும். மரம் வெட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், ரூ .50,000 வரை அபராதம் விதிக்கப்படும். பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளில் மரம் அழிக்கப்பட்டாலும் தண்டனை ஒன்றுதான். தரையில் தீ வைத்து குளிர் காயவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...