8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை – சிவகாசி அருகே கொடூரம்!

விருதுநகர் (22 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமியின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த. கூலித் தொழிலாளி தம்பதிகளின் 8 வயது மகள் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட் கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

பின், வழக்கமாக கிராமத்தினர் இயற்கை உபாதைக்காக செல்லும் புதர் போன்ற காட்டிற்கு செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோரும் உறவினர்கள் காட்டிற்கு சென்று தேடியுள்ளனர்.காட்டில் சிறுமி கிடைக்காததால் உடனடியாக மாறனேரி காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே காட்டில் சிறுமியின் சடலம் கிடப்பதாக அங்கு சென்றவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

புதர் மண்டிய காட்டிற்குள் சென்று பார்த்தபோது முதல்நாள் எந்த இடத்தில் தேடினார்களோ அந்த இடத்தில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. பள்ளிச் சீருடை கலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மோப்ப நாய் சிறிது துாரம் ஓடிச் சென்று சித்துராஜபுரம் ஊருக்குள் வந்து நின்றது. முதல் நாள் தேடிய இடத்தில் கிடைக்காத சிறுமி, மறுநாள் அதே இடத்தில் சடலமாகக் கிடந்தது, சிறுமியின் வீட்டருகே 200 மீட்டர் தொலைவிலேயே சடலம் கிடந்தது ஆகிய சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகிக்கும் போலீசார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...