கொரோனா வைரஸ்லிருந்து பாதுகாக்க – நீதிமன்றத்தில் புதுவித மனு!

சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கை கழுவ அதிக தண்ணீர் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கைகழுவும் திரவம் போட்டு கைகளை கழுவ வேண்டும். அடுத்தவருடன் கைகுலுக்க வேண்டாம். நோய் பாதிப்புள்ளவர்களிடம் நெருங்கிப்பழக வேண்டாம். தேவைப்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்.

இவர்களின் அன்றாட உபயோகத்துக்கு தினமும் ஆயிரத்து 350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் தினமும் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் சென்னையில் இடைவிடாமல் தண்ணீர் வினியோகம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கும் போதுமான அளவுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை. அவர்கள் கைகழுவ பள்ளிகளில் தண்ணீருடன் சோப் அல்லது கைகழுவும் திரவம் இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...