பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

Share this News:

சென்னை (03 ஜன 2023): அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன்.

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் ” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் தொடர்ந்து வரும் பாலியல் சர்ச்சைகள் விவகாரத்தில் காயத்ரி ரகுராமும் பேசுபொருளாக இருந்தார். அவரை 6 மாதம் கட்சி பொறுப்புகளிலிருந்து அண்ணாமலை நீக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply