திமுகவுக்கு எச்.ராஜா மிரட்டல்

சென்னை (23 ஜன 2020): திகவுடன் உள்ள் தொடர்பை திமுக முறித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா “ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ தி.க.வின் நிலைமை தற்போது ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளது. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள்.

மேலும் திகவுடனான தொடர்பை திமுக முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும்’’ என்றார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...