வீணில் தகரம் அடித்து அடைத்தவர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Share this News:

சென்னை (27 ஆக 2020): கொரோனாவிலிருந்து மீண்டவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்த அதிகாரிகளுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுபியுள்ளது.

சென்னையை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிப்பில் வசிக்‍கும் 50 வயது நபருக்‍கு கடந்த 14 நாட்கள் முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள், அவரது வீட்டின் கதவு முழுவதும் மூடுமாறு இரும்பு தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர். அந்த வீட்டில் இதய நோயாளிகள் உள்ளிட்ட 4 பேர் வீட்டில் இருப்பதாகவும், எனவே கதவை அடைக்‍க வேண்டாம் எனக்‍கூறியும், அதனை மறுத்த ஊழியர்கள் வாசலை அடைத்துச் சென்றனர். இதுகுறித்து, 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கக்கோரி, சுகாதாரத்துறை செயலாளர், நகராட்சி ஆணையர், பல்லாவரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply