பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது – ஜவாஹிருல்லா!

சென்னை (21 பிப் 2022): பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள், எழுத்தாளர்கள்ள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் இருந்தார் என்பதே இந்த மண்ணில் சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சி.

பாசிச சங்பரிவார சக்திகளை அனைத்து சமூக மக்களும் ஓரங்கட்டும் நல்ல சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூணூல் அறுக்கும் போராட்டம் என்று ஒரு சிலர் அறிவிப்பது கயமைத் தனமானது. சமூக அமைதியை சீர்குலைக்க கூடியது.

வெகுஜன மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக பகைமையை கூர் தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. அனைத்து மக்களாலும் புறந்தள்ள படவேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....