நள்ளிரவு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தாள் – நீட் தேர்வு பயத்தால் மற்றொரு மாணவி தற்கொலை!

Share this News:

மதுரை (12 செப் 2020): நீட் தேர்வு பயத்தால் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா. இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நள்ளிரவு வரை அவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு நடைபெறுகிறது. ஆனால் இந்த தேர்வு வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்தபடியே உள்ளன.


Share this News:

Leave a Reply