மிஸ்வா அறக்கட்டளை சார்பாக குடியரசு தின தேசிய கொடியேற்ற நிகழ்வு

மேலக்காவேரி (26 ஜன 2022): 73 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மேலக்காவேரி மிஸ்வா அறக்கட்டளை சார்பாக மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் தேசிய கொடியேற்ற நிகழ்வு, தொழிலதிபர் ஹோட்டல் பிரஸிடெண்ட் குழுமம் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் மறைந்த தியாகி மேலக்காவேரி அப்துல் வகாப் அவர்களின் பேரன் ஜனாப் ஜவஹர் அலி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மிஸ்வா தலைவர் மு.அப்துல் அஜிஸ் அவர்கள் வரவேற்புரையாற்றி, கொடி உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கராத்தே முஹம்மது ,யாஸ் ஏஜென்சீஸ் குடந்தை மீடியா ரபி, அப்துல் ரகுமான் மற்றும் பலர் குடியரசு தின உரை நிகழ்த்தினார்கள்.

அசினா ஜுபைதா, முகமது இப்ராஹிம், அஸ்பக்,ஆசிக் , முகமதுரசீன்,அஸ்பிகா ஆகிய மாணவ மாணவிகள், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் வரலாறுகளையும் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு உயிர் நீத்த விடுதலை வீரர்கள் குறித்தும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை கவிஞர் அய்யூப்கான் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் சவுதி அரேபியா ஜெத்தா தமிழ் சங்கத்தின் கலாம் இளந்தளிர் இயக்கம் மற்றும் மிஸ்வா சார்பில் பயன்தரும் பழ மரக்கன்றுகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும், சிகிச்சை பெற வரும் பயனாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

கும்பகோணம் கிஸ்வா துணைச் செயலாளர் பஷீர் அகமது (TMB), பாசிலா நஜீர் அகமது, பைசல், பொறியாளர் மைதீன் பாட்சா, மிஸ்வா மனிதம் கிளினிக் மேலாளர் சாகுல் ஹமீது, தாரிக், செவிலியர்கள் ரோஸி, நந்தினி, கலைமுரசி
ஓவியர் ரபீக், சமூக ஆர்வலர் நஜி உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் : மு.அப்துல் அஜிஸ்

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...