பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கல் – அதிரையில் நகராட்சித் தலைவர் தொடங்கி வைப்பு!

தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செக்கடி மோட்டில் உள்ள ரேஷன் கடையில் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் சார்பில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தொடங்கி வைத்தார். அவருடன் நகராட்சி துணைத்தலைவர் இராம.குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

வந்திருந்த பிரதிநிதிகளுக்கு 7 வது வார்டு செயலர் மரைக்கா இத்ரீஸ், சால்வை போர்த்தி கவுரவித்தார்.

முன்னதாக இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடல் அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000-த்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...