பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

Share this News:

சென்னை (17 டிச 2022): பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வுகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply