திமுகவில் டி.ஆர் பாலு திடீர் போர்க்கொடி – படு அப்செட்டில் ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): டி.ஆர் பாலுவின் நடவடிக்கைகளால், திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் இருந்தார். ஆனால் இரு பதவிகளில் இருப்பது சரியானதல்ல என்று கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு வழங்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால் அதனை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை.

காரணம், ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வரும் நாள்களில் கொண்டு வரப்போகும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில் திமுக இருப்பதால் துணை சபாநயகர் பதவி இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்பது ஸ்டாலினின் கருத்து. ஆனால் டி.ஆர் பாலு பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் ஸ்டாலின் படு அப்செட்டில் உள்ளாராம்.

ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்ட வாக்கெடுப்பின்போது கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வந்தது. அதற்கு டி.ஆர் பாலுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை கனிமொழி எம்.பி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....