அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

Share this News:

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட்டுள்ளது. அவரது அடையாளம் அவர் ஆசிய நாடுகளை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக கலிபோர்னியாவில் உள்ள டோரன்ஸ் என்ற இடத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சந்தேக நபர் இருந்ததாக கருதிய வேன் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வேனை காவல்துறையினர் குழு முற்றுகையிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply